/* */

கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி 17 மணி நேரமாக போராடிய நபர் உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு
X

மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இயங்கிவரும் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரிகள் நேற்றிரவு வழக்கம்போல் தகர்க்கப்பட்ட கற்களை இயந்திரம் மூலம் தள்ளும் பணிகள் நடைபெற்று வந்தது. லாரி டிரைவர்கள் ராஜேந்திரன்(35), செல்வகுமார் (30), கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன் (40), விஜய் (27), செல்வம்(27), லாரி கிளீனர் முருகன்(23) ஆகிய ஆறு பேர் கற்களை அள்ளும்போது சுமார் 300 அடி உயரத்தில் இருந்து திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

தீயணைப்புத்துறை மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய தொடர் மீட்பு பணியில் கிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் விஜய், முருகன் இருவரும் இன்று காலை உயிருடன் மீட்கபட்டனர். மீதமுள்ள நான்கு பேரில் செல்வம் மட்டும் வெளிப்பகுதியில் முக்கால் பகுதி உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியபடி தன்னை காப்பாற்றும்படி சுமார் 17 மணி நேரம் கூக்குரலிட்டபடி உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார். இருப்பினும் அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுவதால் அவரை மீட்க முடியாமல் வீரர்கள் திணறினர். ஒருவழியாக 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வீரர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி செல்வத்தை உயிருடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது செல்வம் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தொடர்ந்து மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. செல்வம் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 17 மணி நேரமாக இரவு கடும் வெயில் என நிலைமையை சமாளித்து எப்படியாவது உயிர் காப்பாற்றி விட வேண்டும் என போராடினார். எல்லோரின் ஆசைப்படி அவர் உயிருடன் மீட்கபட்டும் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 May 2022 2:45 PM GMT

Related News