Begin typing your search above and press return to search.
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்திலும் மழையின் தாக்கம் உள்ளது. அவ்வகையில், நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது.
நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. சாலைகளில் மழை நீர் ஓடியது.
இதேபோல், நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பொழிந்தது. சுமார் 45 நிமிடங்கள் கொட்டித்தீர்த்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால், மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.