/* */

நெல்லை மாவட்டத்தில் 315 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

மோசடி செய்யப்பட்டதாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் 315 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
X

கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன்.

நெல்லை மாவட்டத்தில் கைபேசியை தவறவிட்ட மற்றும் தொலைந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இதுவரை 39 லட்சத்து, 74 ஆயிரத்து 735 ரூபாய் மதிப்பில் 315 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் கைபேசியை தவறவிட்டவர்கள், தொலைத்தவர்கள் தங்களது கைபேசி கண்டுபிடித்து கொடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம் பிரிவில் ஏராளமானவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இதனை துரிதப்படுத்தி கைபேசியை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 70 கைபேசிகளை மீட்டனர்.

இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் சரவணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட கைபேசி மற்றும் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மரக்கன்றையும் உரியவர்களிடம் வழங்கினார்.

இதுபோன்று ஏடிஎம் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறை மோசடியில் பணத்தை இழந்தவர்களின் பணம் 1 லட்சத்து 77 ஆயிரத்து , 177 ரூபாயும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்டத்தில் இதுவரை கைபேசிகளை தவறவிட்டவர்கள், தொலைத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரில் 315 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 39 லட்சத்து 74 ஆயிரத்து 135 ரூபாய் ஆகும். தற்போது 70 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு, பரிசு வந்திருப்பதாக ஓடிபி பெற்றுக்கொண்டு மோசடி வேலை வாங்கித் தருவதாக பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 176 ரூபாய் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் உங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு வழங்கல் மற்றும் ஓடிபி எது என்று கேட்டால் அதனை கொடுக்கக் கூடாது. இது தொடர்பான புகார்களை 15 52 60 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறினார்.

Updated On: 13 Dec 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்