நெல்லை: அடிதடி, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்த தாழையூத்து சித்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கியப்பா என்பவரின் மகன் தளவாய்மாடசாமி (22) மற்றும் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் பேச்சிமுத்து (35) பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.
அதன்பேரில், குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க சிவந்திபட்டி காவல் ஆய்வாளர் சாந்தி அறிவுறுத்தினார். அதன் பேரில், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். அதன் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.