/* */

தாமிரபரணியில் இருந்து நெல்லை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

சுத்தமல்லி அணையில் இருந்து நெல்லை கால்வாய்க்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தாமிரபரணியில் இருந்து நெல்லை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
X

நெல்லை கால்வாய்க்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார் சாகுபடிக்கு தண்ணீர் எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், அணையில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் ஜூன் 1ஆம் தேதி விவசாயத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நல்ல மழை பெய்ததால் அணைகள் அனைத்தும் நிரம்பின. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு கடந்த 1ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தாமிரபரணி நதியில் சுத்தமல்லி அணையில் இருந்து திருநெல்வேலி கால்வாய்க்கு தண்ணீரை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசிய போது :-

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 130 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறக்கப்படும் என்றும் இதன் மூலம் 4,168 ஏக்கர் விளை நிலங்கள் யபாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் சிக்கனமாக அந்த நீரை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கினர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #திருநெல்வேலி #தாமிரபரணி #ஆறு #சுத்தமல்லி #அணை #தண்ணீர் #திறப்பு #நெல்லை #கால்வாய்

Updated On: 4 Jun 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்