நெல்லை: ஆட்டோ டிரைவர் காெலை வழக்கில் நில அபகரிப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் நில அபகரிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் அவரது மகன், மனைவி உட்பட 5 பேர் கைது.
HIGHLIGHTS
நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் லோடு ஆட்டோ ஓட்டுனர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நில அபகரிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம். மேலும் அவர் உட்பட ஐந்து பேர் கைது.
திருநெல்வேலி டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாநகர காவல்துறை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் பணியிடை நீக்கம். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் நடவடிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் நிலத்தகராறில் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் அவரது மகன் பாலமுருகன் அவரது மனைவி ராஜம்மாள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..