/* */

நீட் தேர்வு என்பது புதைக்கப்பட்ட கன்னிவெடி: கி.வீரமணி பேச்சு

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், புதிய கல்வி கொள்கையை கைவிடவேண்டும், உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி கி.வீரமணி 21 நாள் பிரச்சர பயணம்.

HIGHLIGHTS

நீட் தேர்வு என்பது புதைக்கப்பட்ட கன்னிவெடி: கி.வீரமணி பேச்சு
X

தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஸ்டாலின் தலைமையில் நடப்பதற்கு எதிராக வடக்கே இருந்து அனுப்பப்பட்ட ஆளுநர் செயல்படுகிறார் என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசினார்.

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். மாநில சுயாட்சி மீட்பு உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி 21 நாள் பிரச்சர பயணத்தை திராவிடர் கழக தலைவர் வீரமணி மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நெல்லை சிந்துபூந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கீ.வீரமணி:-

மத்திய அரசு மனு தர்மத்தை அடிப்படையாக கொண்டு கல்வியை தடுத்து கொண்டிருக்கிறது. நம்முடைய நாட்டில் கல்வி ஓடையில் இருக்கும் முதலைகளிடம் இருந்து பிள்ளைகளை தடுக்க வேண்டும் என்றே இந்த பயணம் மேற்கொள்ளபட்டு வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் நிறைவு பெறுகிறது. மனு தர்மம் மீண்டும் புகுத்தப்பட்டுள்ளது. குலகல்வி திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில அரசுக்கான கல்வி உரிமை கிடையாது என சொல்லி அனைத்து உரிமையும் மத்திய அரசுக்கு தான் என சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதி எடுத்ததற்கே விரோதம். அரசியலமைப்பு சட்டத்தை மீறி தேர்வு நடந்து வருகிறது என தெரிவித்தார். அதிகாரத்தை மீறி அரசிலமப்பு சட்டத்திற்கு எதிராக நீட் மசோதாவை ஆளுனர் நிராகரித்துள்ளார். மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சட்டமன்றத்தில் நீட் மசோதாவிற்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி உள்ள நிலையில் ஒன்றரை மாதமாக அதனை கிடப்பில் போட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஆளுனர் செயல்பட்டுவருகிறார்.

திட்டமிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அதன் வழிப்படி செயல்பட முடியாமல் ஆளுனர் தடை செய்கிறார். நீட் தேர்வை ஏற்றுகொள்ள முடியாது என சட்டமன்றத்தில் அரசின் கொள்கைப்படி படித்துவிட்டு நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என சொல்கிறார். இந்தியாவே தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகிறது. தமிழகம் கல்வி, மருத்துவம்,வறுமை ஒழிப்பு,பெண் கல்வி போன்றவைகளில் கஜானா காலியாக இருக்கும் போதும் கூட முதலிடத்தில் இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக கடன் பெற்று நெருக்கடியில் ஆட்சி நடக்கும் நிலையில் அரசின் கொள்கையை மீறி நீட் தேர்வு மசோதாவை மேலிடத்திற்கு ஆளுனர் அனுப்ப மறுக்கிறார். மாநிலம் வளரவேண்டும் என அனைவரும் என்னும் போது மாநிலம் வளர்ச்சி அடையகூடாது திராவிட மாடல் கூடாது என ஆளுனர் சொல்கிறார். வேண்டும் என்றே தகராறு உண்டாக்க வேண்டும் என்று போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஸ்டாலின் தலைமையில் நடப்பதற்கு எதிராக வடக்கே இருந்து அனுப்பபட்ட ஆளுனர் அரசியல் அமைப்பு சட்டப்படி கடமையை செய்யாமல் தேவையில்லாமல் அதிகமாக பேசி மாநிலத்தின் வளர்ச்சி தேவை இல்லை என்கிறார். சமத்துவம், ஜாதி ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். இதுதான் மனுதர்ம ஒழிப்பு. நீட் தேர்வு என்பது புதைக்கப்பட்ட கன்னிவெடி போன்ற ஆபத்தானது. தேவைபட்டால் ஆளுனரை திரும்பி அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்ய கூடிய அளவிற்கு மக்களை ஆயத்தபடுத்தவே இந்த சுற்றுபயனம்.நுழைவு தேர்வு வைத்து ஏழை பிள்ளைகளின் கல்வியை தடுக்ககூடாது. தடுப்பு முயற்சி மற்றும் தடைகளை உடைக்கவே போராட்டங்கள் நடக்கிறது. ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்பதை திராவிடர் கழகம் எச்சரிக்கிறது என தெரிவித்தார்.

Updated On: 5 April 2022 4:12 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்