/* */

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்
X

குறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது .

இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் நடைபெற்றது. முருக பெருமான் செப்பு கடையத்தில் கோவிலிலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் தேரை 4 ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 15 April 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்