மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்கள் வழங்கும் பணி தீவிரம்
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்களை திமுக, அதிமுக, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பெற்று சென்றனர்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட மேலப்பாளையம் மண்டலத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பலரும் பெற்று சென்றனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 16 வார்டுகளில் போட்டியிட வேட்புமனுக்கள் வழங்கும் பணி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் தொடங்கப்பட்டது.
இதில், முதல் நாளான இன்று திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் என 30க்கும் மேற்ப்பட்டோர் மனுக்களை பெற்று சென்றனர். இதேபோல் திருநெல்வேலி பாளையங்கோட்டை தச்சநல்லூர் மண்டல மாநகராட்சி அலுவலகத்திலும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனுக்களை பெற்று சென்றனர்.
இதனையொட்டி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளின் அடி மண்டல அலுவலகம் முன் இருந்த அரசியல் கட்சி கொடிகள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.