/* */

ரெயில்வே, வங்கித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Naan Mudhalvan Scheme-ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

Naan Mudhalvan Scheme
X

Naan Mudhalvan Scheme

Naan Mudhalvan Scheme-ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு குழுமம் மற்றும் வங்கி தேர்வு குழுமம் இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றி அடையச் செய்யும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டையில் உள்ளி மாவட்ட மைய நூலகத்தில் வருகிற 25ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு மொத்தம் 300 மணி நேரங்கள் நடைபெறவுள்ளது. போட்டி தேர்வு துறையில் நல்ல அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

பயிற்சிகளுக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் bit.iy/naanmudhalvanexams என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. மேற்படி குறிப்பிட்டுள்ள இணைய முகவரி NELLAI EMPLOYMENT OFFICE- என்ற TELEGRAM CHANEL-ல் பகிரப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் 17சி, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் சி காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0462-2532938 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 8:54 AM GMT

Related News