Begin typing your search above and press return to search.
பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: பாேலீசார் அதிரடி
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் இந்திரா நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அஜித்குமார்(27). இவர் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.
அதனடிப்படையில் குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் மேற்படி குற்றவாளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், 12.08.2021 அன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.