அடிதடி, கொலை முயற்சி வழக்கு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம் வீரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்த வேல்முருகன் என்ற ராக்கி என்பவரின் மகன் சிவா என்ற ராக்கி சிவா(25).
இந்நிலையில் சிவா அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.
அதன்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு அறிவுறுத்தியதன் பேரில் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், 10.08.2021 குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.