நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்
நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
கலைமாமணி சூரியின் 44-வது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் மற்றும் அகில இந்திய சூரி ரத்ததான கழகம் சார்பில் காவல் நிலையம், பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சின்ன கலைவாணர் விவேக் பசுமை இயக்கம் மூலம் விட்டுச்சென்ற மரக்கன்றுகள் நடும் கனவு பணியினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தனது பிறந்தநாளில் நடிகர் சூரி ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் கலைமாமணி சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாநில நிர்வாகி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
நாளந்தாவில் கிராமத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அரசுப் பள்ளியில் 1,000 மரக்கன்றுகளும், சி.என். கிராமத்தில் அண்ணா நடுநிலைப்பள்ளியில் 300 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நெல்லை பாலம் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் முத்துமாரி, வள்ளியம்மாள், முத்துராமலிங்கம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் கணேசன், இளைஞரணி தலைவர் கார்த்திக் நிர்வாகிகள் அக்ரம், அபூல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.