/* */

நெல்லையில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது: வாகனம் பறிமுதல்

பாளையங்கோட்டையில் டாடா சுமோவில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி, வாகனம் பறிமுதல். இது தொடர்பாக இருவர் கைது.

HIGHLIGHTS

நெல்லையில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது: வாகனம் பறிமுதல்
X

தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சிக்கிய 1 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல். இது தொடர்பாக இருவர் கைது.

திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் 06-09-2021 ம் தேதியன்று, பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக டாடா சுமோ வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்த விசாரணையில் கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரதீஸ்குமார் ஆகிய இருவரையும் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது. உடனடியாக இது குறித்து திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரரிடம் தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தலுக்குக்கு பயன்படுத்திய டாடா சுமோ மற்றும் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 8 Sep 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...