/* */

நெல்லையில் பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் தஞ்சமடைந்த கலப்பு திருமண ஜோடி

நெல்லையில் ஜாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் தஞ்சமடைந்த கலப்பு திருமண ஜோடி
X

திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

ஜாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

நெல்லையை அடுத்துள்ள சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ஜெனி இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்ட பின்னர் தங்களுக்கு குடும்பத்தாரிடமிருந்து மிரட்டல் வருவதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். மேலும் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து கொலை மிரட்டல் வருவதால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 6 Sep 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!