/* */

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம். இந்த ஆண்டு 41 லட்சம் விற்பனை இலக்கு.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை
X

காந்தியடிகள் 153 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கவிழா. தீபாவளியையொட்டி 41 லட்சம் விற்பனை இலக்கு.

தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி கதர் முதல் சிறப்பு விற்பனையை இன்று நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் சுதாகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் கதர் விற்பனை கடந்த ஆண்டு 40 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 25.96 லட்சம் விற்பனை ஆனது. கிராமப் பொருட்கள் விற்பனை 35.40 லட்சம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு விற்பனையை பொருத்தளவில் 41 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்ற கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சியில் கதர் விற்பனை நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை