/* */

தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு

தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அரசு சித்த கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு
X

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு சித்த மருத்துவ கல்லூரி ஆயுஷ் மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு துறை சார்பில் இன்று தவறாக மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மற்றும் அதனை மருத்துவப் பணியாளர்களிடம் பதிவு செய்தல் போன்றவை பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா, துணை முதல்வர் டாக்டர் செளந்தரராஜன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

சித்தா கல்லூரியில் தொடங்கிய பேரணி வ.உ.சி மைதானம் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் பேரணி முடிவடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பேரணியின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Updated On: 19 Sep 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!