Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 28பேர் கைது
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 09-ம் தேதி தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 28 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 470 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.