/* */

திருச்சிக்கு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆட்டோ டிரைவர் கைது

திருச்சிக்கு ரயி்ல் மூலம் மதுபாட்டில்களை கடத்தி வந்த ஆட்டோ டிரைவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சிக்கு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆட்டோ டிரைவர் கைது
X

திரு்ச்சிக்கு ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆட்டோ டிரைவரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொரோனா அச்சத்ததால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் எதுவும் இயக்கப்படாத நிலையில் ஒரு சில ரயில் சேவை மட்டும் இயங்கி வருகிறது.

திருச்சியில் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,ராக்போர்ட் உள்ளிட்ட சொற்ப அளவிலேயே ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வடமாநிலத்தில் இருந்து ஹவுரா மைசூர் ரயிலில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து அதில் வந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது திருச்சி பொன்நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான தங்கராசு என்பவர் அவரது பையில் 30 சரக்கு பாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செயஅதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 6 Jun 2021 2:00 AM GMT

Related News