/* */

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி

திருச்சி கோட்டை பகுதியில் தனிமையில் வீட்டில் இறந்து கிடந்த தொழிலாளியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி
X
திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி கீழ தேவதானத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50). காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளப்பட்டிக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் செல்வக்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே சென்று விட்டு சுமார் 12 மணியளவில் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். அதன் பிறகு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று (08.12.2021) மதியம் அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் செல்வக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால்,பூட்டு போடாமல் சாத்தியிருந்த கதவை திறந்து பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் உள்ள உறவினர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது செல்வக்குமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடத்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!