/* */

திருச்சி-திண்டுக்கல் இடையே மீண்டும் பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

திருச்சி-திண்டுக்கல் இடையே பாசஞ்சர் ரயில் சேவை மீண்டும் தொடங்கி இருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. அவற்றிலுள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட முன்பதிவு செய்து தான் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து இருப்பதை தொடர்ந்து பல வழித்தடங்களில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சி- திண்டுக்கல் இடையே ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. திண்டுக்கல்லில் இருந்து இன்று காலை 6:15 மணிக்கு புறப்பட்ட ரயில் 8. 25 மணிக்கு திருச்சி வந்தடைந்தது. இந்த ரயில் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு சென்றடையும்.இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.

Updated On: 8 Oct 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!