/* */

ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது போலீசார் வழக்கு

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த  கணவன்-மனைவி மீது போலீசார் வழக்கு
X

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு அளுந்தூர் கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை ரூ.51 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாங்க நிர்ணயம் செய்து ரூ.10 லட்சத்தை முன் தொகையாக நில உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் பல தவணைகளில் மீதி தொகையை கொடுத்து அந்த நிலத்தை தனது விருப்பத்தின் பேரில், மற்றொரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்துள்ளார். ஆனால் 2012-ஆம் ஆண்டு நிலம் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவியில் இருந்த நபர் விலகி விட்டதால், புதிய நிர்வாக இயக்குனரை வரதராஜன் நியமித்துள்ளார்.

அதன்பிறகு அளுந்தூரில் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த 9 ஏக்கர் நிலத்தில் சில பகுதிகளை மட்டும் விற்பனை செய்துள்ளனர். விற்பனை செய்த தொகை ரூ.90 லட்சத்தில் ரூ.20 லட்சத்தை மட்டும் நிறுவனத்தில் கணக்கு காண்பித்து விட்டு மீதமுள்ள ரூ.70 லட்சத்தை கணக்கில் தாக்கல் செய்யாமல் மோசடி செய்து விட்டதாக வரதராஜன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 27 Feb 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!