/* */

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சியில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சூர்யா என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

HIGHLIGHTS

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

திருச்சி , மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21–ந்தேதி ரிசாந்த் என்பவரை கொலை செய்ததாக சூர்யா (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

குற்றவாளி சூர்யா மீது 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தொடர்ந்து குற்றம் செய்யக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்படி, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சூர்யா, குண்டர் தடுப்பு சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்