Begin typing your search above and press return to search.
பாலக்கரை அருகே ரயில் மோதி ஒருவர் பலி
பாலக்கரை அருகே ரயில் மோதி ஒருவர் பலியானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
HIGHLIGHTS
திருச்சி ஜங்ஷனிலிருந்து கரூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் பாலக்கரை-கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து வழக்கு பதிந்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்மோதி இறந்தாரா? அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.