/* */

திருச்சியில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்ம சாவு

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
X

திருச்சி சுப்பிரமணியபுரம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரதிஷா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பிரதிஷா விவாகரத்து பெற்று கேரளாவிற்கு சென்றுவிட்டார்.

இதனால் சதீஷ்குமார் மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து சதீஷ்குமாரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து சதீஷ்குமாரின் தங்கை சவுமியா கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சதீஷ்குமார் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்..

Updated On: 22 Dec 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!