/* */

துறையூர் அருகே பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்

துறையூர் அருகே ரோட்டோரம் கிடந்த பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

துறையூர் அருகே பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்
X

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நாகநல்லூரில் இருந்து முத்தையம்பாளையம் செல்லும் வழியில் 100 நாள் பணியாளர்கள் தங்களுக்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண் ரோட்டோரத்தில் கீழே கிடந்த ஒரு பாட்டிலை எடுத்து உடைத்து திடீரென தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அவரை உடனடியாக 108ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சேலத்தை சேர்ந்த சஞ்சீவி-மூக்காயி தம்பதியினர் தனது மகளான சங்கீதா (வயது 21) என்பவருடன் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது உறவினர் (மாற்றுத்திறனாளிக்கு) திருமணம் செய்து வைக்க, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வைரிசெட்டிப்பளையம் வந்துள்ளனர். வந்த இடத்தில், சற்று மனநலம் பாதிப்புக்குள்ளான சங்கீதா, தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வேறு ஏதும் காரணம் உண்டா? சங்கீதா மனநலம் பாதிப்புக்கு உள்ளானவரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Feb 2022 3:44 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!