/* */

துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், துறையூரில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள்  திடீர் சாலை மறியல்
X

துறையூர் ஆலமரம் பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், துறையூர் ஆலமரம் பகுதியில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் ஒரு வழிப்பாதையில் ஆலமரத்தடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முறையான குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதிகள் சரி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

மறியலில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரகவி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 2 Aug 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!