/* */

துறையூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

துறையூர் அருகே மீன்பிடித்தபோது, கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

துறையூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
X

கிணற்றில் தவறி விழுந்து இறந்த திலக்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் திலக் (வயது 11). இவன் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை திலக் செங்காட்டுப்பட்டியில் உள்ள பழ மலை கோவில் செல்லும் வழியில் திருநாவுக்கரசு என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன்பிடிக்க சென்றான்.

சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். இதை யாரும் கவனிக்காததால் அவன் கிணற்றுக்குள் மூழ்கினான். இந்த நிலையில் திலக் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி வந்தபோது, அவன் கிணற்றுக்குள் விழுந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் அதிகாலை 2 மணி அளவில் திலக்கை கிணற்றில் இருந்து பிணமாக மீட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரகவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 Jan 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!