/* */

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே துணை தாசில்தாரின் தந்தை மர்மமாக இறந்து கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு
X

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா (வயது 63). இவருக்கு நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. சுப்பையா அவரது வயலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வேல்முருகன் என்பவரது தோட்டத்தின் அருகே மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் உடலில் லேசான காயங்களுடன் மர்மமான முறையில் சுப்பையா இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பையாவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பையாவின் மகன் கோவிந்தராஜ் உப்பிலியபுரம் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Jan 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!