/* */

பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடியவர் கைது

துறையூர் பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடியவர் கைது
X

திருச்சி மாவட்டம் துறையூரில் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சந்தோஷ். பன்றிப்பண்ணை உரிமையாளரான இவர் கடந்த மாதம் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி அவரது வீட்டில் இருந்து ரூ.5 1/2 லட்சம் மற்றும் 13 பவுன் நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது பற்றி சந்தோஷ் கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் தனிப்படை அமைத்து முசிறிதுணை சூப்பிரண்டு அருள்மணி தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று துறையூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற மர்மநபரை துறையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறினார். இதையடுத்து அவரிடம்போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தர்மா என்ற தர்மன்(வயது 29) என்பதும், நெசவாளர் காலனியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 5:16 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!