/* */

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அராஜகம்- அ.தி.மு.க. பரபரப்பு புகார்

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அராஜகம்- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அராஜகம்- அ.தி.மு.க. பரபரப்பு புகார்
X

அ.தி.மு.க. வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என்பது பற்றி அதிகாரிகளிடம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி விளக்கம் கேட்டார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 10 வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே. சாமி என்கிற கந்தசாமியின் வேட்பு மனு இன்று நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தகவல் அறிந்ததும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி உடனடியாக அங்கு சென்று அதிகாரிகளிடம் தள்ளுபடிக்கான காரணம் கேட்டறிந்தார்.

பின்னர் பரஞ்ஜோதி கூறுகையில் துறையூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி காலையில் அறிவித்தார். அதன் பின்னர் தி.மு.க.வினர் அங்கு வந்து அந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என கூறி அராஜகத்தில் ஈடுபட்டதால் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் இதுபோன்று தி.மு.க.வினர் அராஜகம் செய்து வருகிறார்கள், தி.மு.க.வினரின் இந்த அநீதியான செயலுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Updated On: 6 Feb 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!