/* */

திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது

திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது
X

திருச்சியில் புலி பல், யானை தந்தம், வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி திருவெறும்பூரை அடுத்த தேவராயநேரியில் ஏராளமான நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர் இதில் பலர் மான் கொம்பு, நரியின் பற்கள், யானை முடி மற்றும் தந்தத்தின் பகுதிகளை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து திருச்சி வனத்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இன்று அந்த பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தேவராயநேரியை சேர்ந்த பாண்டி மற்றும் அருண் சௌந்தர்ராஜன் யானையின் தந்தத்தை வைத்து இருந்தது தெரியவந்தது

இதனையடுத்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தால் ஆன பொருட்கள், புலி நகம், நரி பல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Updated On: 23 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?