/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடங்குகிறது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம்
X

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வரும் 18-ம் தேதி துவங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் யாகசாலையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்துக்கு 5. 30-மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7. 15-மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளிய பின் மங்களாரத்தி கண்டருளுகிறார்.பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9-மணிக்கு புறப்பட்டு 9.15- மணிக்கு யாகசாலைக்கு சென்றடைகிறார்.

விழாவின் 2-ம் நாள் முதல் 6-ம் நாள் வரை மற்றும் 8-ம் நாள் ஆகிய 6 நாட்களும் தினமும் நம்பெருமாள் யாகசாலையிலிருந்து மாலை 5. 30-மணிக்கு புறப்பட்டு 6-மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேர்கிறார். பின்னர் ஊஞ்சல் உற்சவம் இரவு 7. 15-மணிக்கு துவங்கி 8-மணி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 7-ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6-மணிக்கு புறப்பட்டு கொட்டாரவாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 7-மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு நடைபெறும். இரவு 7. 30 மணி முதல் 8. 15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நிறைவு நாளான 9-ஆம் நாள் 26-ஆம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும்.

Updated On: 17 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!