/* */

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

திருச்சி அருகே உள்ள அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்
X

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன்காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைராஜ் தலைமை தாங்கினார். அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார் . வட்டார தலைமை மருத்துவ அதிகாரி விக்னேஸ்வரன் வரவேற்றார்.

இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன், இ.சி.ஜி, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவம் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலமும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக குழுமணி ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சண்முகவடிவு, மாவட்ட கவுன்சிலர் பாக்கியலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 261 பயனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் கிராம சுகாதார செவிலியர் தனசீலி நன்றி கூறினார்.

Updated On: 11 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை