/* */

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு

திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு
X

திருச்சி எம்.ஆர். பாளையம் வன உயரியல் பூங்காவில் 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலயைில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் கோழிகமுத்தியிலுள்ள முகாமில், தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட ரோகிணி என்ற 60 வயது யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து எம்.ஆர். பாளையத் திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட வனத்துறை கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் இங்கு முகாமிட்டு யானை ரோகிணியின் உடல்நலத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்டம். ராஜபாளையத்திலிருந்து இந்திரா என்கிற லட்சுமி என்ற 25 வயது யானையும் நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.பாளையம் முகாமிற்கு பராமரிப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 8 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 23 Dec 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  10. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!