/* */

சாலையோரம் நின்ற லாரியில் ரூ 2.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

திருச்சி அருகே சாலையோரம் நின்ற லாரியில் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடிய, திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சாலையோரம் நின்ற லாரியில் ரூ 2.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
X

பைல் படம்

சென்னை மதுராந்தகம் பகுதியில் உள்ள என்.ஜே.எஸ்.என்.ஜே.என்ற மதுபான தொழிற்சாலையில் இருந்து 975 மதுபான பெட்டிகளை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு லாரியை லாரி டிரைவர் ஓட்டி வந்தார்.

அப்போது திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள டோல்பிளாசா அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றுள்ளார். பின்னர் டீ குடித்துவிட்டு வந்து அந்த லாரியை பார்த்த போது லாரியில் வைத்திருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 36 மதுபான பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து லாரி டிரைவர் செல்வம் என்பவர் சமயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபான பாட்டில்கள் திருட்டு குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?