/* */

தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.. தூத்துக்குடி மாவட்ட தபால் நிலையங்களில் ஏற்பாடு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.. தூத்துக்குடி மாவட்ட தபால் நிலையங்களில் ஏற்பாடு..
X

இந்திய அஞ்சல்துறை அஞ்சலகங்களில் பணமுதலீடு செய்யும் சாவரின் தங்கப்பத்திர திட்டம் இந்த ஆண்டின் மூன்றாவது விற்பனையை, டிசம்பர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை தொடங்க உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,409 ஆகும். சாவரின் தங்கப்பத்திரம் திட்டத்தில ஒருவர் 4 கிலோ வரை பணம் முதலீடு செய்து பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்துள்ள பணத்திற்கு ஆண்டிற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். வட்டித் தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதன் மூலம் வீடுகளில் தங்கம் காகித வடிவில் மட்டுமே இருக்கும். எனவே, தங்க நகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. 8 ஆண்டுகளில் இந்தப் பத்திரம் முதிர்வடையும். எனினும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து பணம் பெறலாம். அவசர தேவைக்கு தங்கப் பத்திரத்தை அரசு, தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.

இந்தப் பத்திரத்தைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் கார்டு நகல் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டை நகலும் கட்டாயம் வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிராமப்புற தபால் நிலையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், விபரங்களுக்கு அஞ்சல் வணிக அலுவலுவர்களை 9942693129, 9791655030 மற்றும் 7826013510 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Dec 2022 2:50 PM GMT

Related News