Begin typing your search above and press return to search.
திருவாரூர் அருகே ரயிலில் அடிபட்டு 12ஆம் வகுப்பு மாணவன் உயரிழப்பு
திருவாரூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவர் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகிய நிலையில் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே குளிக்கரை ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவரது மகன் பவித்ரன். இவர் குளிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் .
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் பவித்ரன் மோதியதில் தலை துண்டாகி இறந்தார். ரயில்வே போலீசார் பவித்ரனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரயில் மோதி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.