Begin typing your search above and press return to search.
திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல்
திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது, இதனையொட்டி வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 30 பேரும் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
குறிப்பாக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் இன்று ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.