/* */

திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம் பாதிப்பு

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் கசிந்து பரவியது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம் பாதிப்பு
X

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் கசிந்து பரவியது.

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப்பகுதியைச் சுற்றி ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் குழாய்கள் மூலம் விளைநிலங்கள் வழியாக குடும்பனார் கோயிலிலிருந்து வேளுக்குடி கிராமம் வரை எடுத்து செல்லப்படுகிறது.

இந்நிலையில் விவசாயி நடராஜன் என்பவர் நிலத்தின் வழியாக செல்லும் குழாய் இன்று உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் கசிந்து பரவியது. இதனால் அதில் பயிரிடப்பட்டிருந்த பச்சை பயிர் மற்றும் உளுந்து பயிர்கள் சேதமாகின. இதுகுறித்து ஓஎன்ஜிசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு சென்று சேதமடைந்த விளைநிலத்தை பார்வையிட்டனர். அப்போது அந்தக் குழாய் ஓஎன்ஜிசிக்கு சொந்தமானது அல்ல என்பது தெரியவந்தது. மேலும் அந்த எண்ணெயின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து வட்டாட்சியர் நடராஜனின் நிலத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக விவசாயி கூறுகையில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் வகைகள் அனைத்தும் சேதமாகி சேதமாகி உள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Feb 2022 1:01 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை