Begin typing your search above and press return to search.
கோடை வெயிலையொட்டி திருவாரூரில் தி.மு.க .சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
கோடை வெயிலையொட்டி பொது மக்களுக்கு உதவும் விதமாக திருவாரூரில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் மக்கள் கூடும் இடங்களில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு பொது மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்ணின் மைந்தர் மோர் பந்தலை திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திறந்து வைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் இளநீர், நுங்கு, மோர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பானங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் அசோகன் வரதராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.