/* */

திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு

கனமழையால் நீர் சூழ்ந்த இடங்களை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு
X

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன். 

திருவாரூர் மாவட்டத்தில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் தலா 10 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு சில வீடுகளில் உட்புறமும் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை, இடுப்பளவு தண்ணீரில் நேரில் பார்வையிட்ட திமுக மாவட்டசெயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து குழுந்தான்குளம், கீழ்க்கரை பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பாதிக்கப்பட்ட, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, மதிய உணவு வழங்கினார். இதில் திருவாரூர் நகர கழக செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 27 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்