திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு
கனமழையால் நீர் சூழ்ந்த இடங்களை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் தலா 10 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு சில வீடுகளில் உட்புறமும் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை, இடுப்பளவு தண்ணீரில் நேரில் பார்வையிட்ட திமுக மாவட்டசெயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து குழுந்தான்குளம், கீழ்க்கரை பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பாதிக்கப்பட்ட, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, மதிய உணவு வழங்கினார். இதில் திருவாரூர் நகர கழக செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.