பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளம் சீரமைக்கும் பணியை ஆய்வு
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளக்கரை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் கரைகள் கடந்த மாதம் பெய்த கனமழையால இடிந்து விழுந்தன. உடனடியாக முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு அடுத்த நாளே நேரில் வந்து சேதமடைந்த கமலாலயக் குளத்தின் கரைகளை பார்வையிட்டு கரையை பலப்படுத்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.