/* */

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி திருவாரூரில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவாரூரில் எல்ஐசியின் மத்திய அரசை கண்டித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்ஐசி ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே எல்ஐசியின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சைக் கோட்டை இணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள், முகவர் சங்க பொறுப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு எம்பி கலந்து கொண்டு மத்திய அரசை மக்கள் விரோத கொள்கைகளைக் விளக்கி கூறி எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இது ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், கிளை செயலாளர் கமலவடிவேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2022 2:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்