/* */

கொரோனா நிவாரண நிதி: திருவாரூரில்

திருவாரூரில் கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை எம்.எல்.ஏ மற்றும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி: திருவாரூரில்
X

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் நிவாரணம் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதன்படி திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள நியாய விலை கடையில் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 728 நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் உள்ள 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி முதல்கட்டமாக 2,000 ரூபாய் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 15 May 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்