/* */

திருவாரூர் அருகே 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

திருவாரூர் அருகே 60 கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாவில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
X

கர்ப்பிணி பெண்களுக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

திருவாரூர் அருகே கொரடாச்சேரி தனியார் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் கொரடாச்சேரி வட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புடவை உள்ளிட்ட 18வகையான சீர்வரிசை பொருட்களை 60 நபர்களுக்கு பூண்டி கலைவாணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உமாபிரியா பாலச்சந்தர் ,துணை ஒன்றிய பெருந்தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 13 Dec 2021 6:43 AM GMT

Related News