/* */

திருவாரூரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

திருவாரூரில் ஊரடங்கில் விதியை மீறி சுற்றித்திரிந்த 830 வாகன்ங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில்  ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
X

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வாகனங்களில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை வாகன சோதனை செய்து பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கடந்த 24-ந்தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த முன்று தினங்களில் மாவட்டத்தில் சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 830 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த24-ந்தேதி முதல் இன்று வரை மொத்தம் 830 இருசக்கர வாகனங்களும், 3 நான்கு சக்கர வாகனங்களும், மற்ற வாகனம் நான்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று தினங்களில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த நபர்கள் மீது 332 வழக்குகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள்மீது 33 வழக்குகளும் மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்து ரூ 82,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி.எச்சரிக்கை செய்துள்ளார்.

Updated On: 27 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...