/* */

சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து  நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
X

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமருதூர் கிராமத்தில் ரயிலடி தெரு பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாத காரணத்தால் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டதாகவும்,அதன் பின்பு பல ஆண்டுகள் கழித்தும் புது சாலை அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

இது தவிர இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை பார்வையிட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 18 Nov 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...