/* */

திருவாரூரில் தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் சிபிஎம் கோரிக்கை

திருவாரூரில்  தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும்  சிபிஎம் கோரிக்கை
X

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினைப் போக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். குடவாசல் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மருத்துவமனையில், ஐந்து நாட்களுக்கு முன்பு கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு செய்தவர்களுக்குக் கூட தடுப்பூசிப் போட முடியாத நிலை உள்ளது.

மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்கும்போது, தடுப்பூசி இன்னும் வந்து சேரவில்லை என தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் தமிழக அரசும், மத்திய அரசும் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளனர்.

ஆனால் குடவாசல் போன்ற பல மருத்துவமனைகளில், பல நாட்களுக்கு முன்பு தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு செய்தவர்களுக்குக் கூட தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 5% பொதுமக்கள் மட்டுமே தற்போதுவரை தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளதாக, சுகாதாரத்துறைப் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. தற்போது கொரோனா இரண்டாம் அலைக் கிராமப் பகுதிகளிலும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து, தேவையான தடுப்பூசிகளைப் பெற்று, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Updated On: 25 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்