/* */

முதல் போக நெல் சாகுபடிபடிக்காக வைகை அணை திறப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐந்து ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்ய வைகை அணையில் இன்று நீர் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

முதல் போக நெல் சாகுபடிபடிக்காக வைகை அணை திறப்பு
X

தேனியில் வைகை அணையை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி, கலெக்டர் முருளிதரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

வைகை அணையில் இருந்து நான்கு மாவட்டங்களில் உள்ள ஒரு போக நெல் சாகுபடி நிலங்களுக்கு அமைச்சர் பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, தேனி கலெக்டர் முரளிதரன், டி.ஆர்.ஓ., ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். தண்ணீர் திறந்து வைத்து அமைச்சர் கூறியதாவது: வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் ஒரு போக நெல் சாகுபடி நிலங்களுக்கு நடவு பணிகளுக்காக இன்று விநாடிக்கு 1100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் கால்வாயிலும் இந்த தண்ணீர் திறக்கப்படும். தொடர்ச்சியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு போக நெல் சாகுபடிக்கு வழக்கத்திற்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை வைகை பாசனத்தில் தண்ணீர் பெறும் அத்தனை விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

Updated On: 11 Aug 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...